Monday, September 3, 2012

ஏ.டி.எம்மில் வெளியே வந்த பணம் இனி உள்ளே செல்லாது:

ஏ.டி.எம்மில் வெளியே வந்த பணத்தை குறிப்பிட நேரத்திற்குள் எடுக்காவிட்டால் வெளியே வந்த பணம் திரும்பி உள்ளே செல்லும் முறையை ரிசெர்வ் பேங்க் கடந்த வாரம் முதல் தடை செய்துள்ளது.



தடைக்கு காரணம் என
்ன?..

சிலர் வெளியே வந்த பணத்தில் ஒரு பகுதியை எடுத்துவிட்டு சிறிது நேரத்தில் மீதியை ஏ.டி.எம்மில் வைத்தால் ஏ.டி.எம் திருப்பி எடுத்துக்கொள்ளும் பிறகு அந்த நபர் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று வெளியே வந்த பணத்தை தான் எடுக்க வில்லை ஆனால் பணம் ஏ.டி.எம் உள்ளே சென்று விட்டது என்று பொய்யான தகவல்களை தந்து ஏமாற்றியதாலும், இதனால் பல குழப்பங்கள் தொடர்ந்த வன்னம் இருந்துவந்ததாலும் இந்த தடை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஏ.டி.எம் காவலாளிகள் கூறுவதாவது. "இதனால் நிறைய தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. யாரவது வெளியே வந்த பணத்தை எடுக்க மறந்து சென்று விட்டால் அவருக்கு பின் பணம் எடுக்க வந்தவர்கள் பணத்தை எடுத்துக்கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கிறது...இதுவரை நாங்கள் பணம் எடுக்க வருபவர்களிடம் அவர்களுடைய உடமைகளை பத்திரமாக மறக்காமல் எடுத்துசெல்லுமாறு அறிவுறுத்துவோம்.. ஆனால் இனி பணத்தையும் சேர்த்து மறக்காமல் எடுத்து செல்லுமாறு சொல்லவேண்டும்..." என்று கூறுகின்றனர்.

இனி நீங்க ஏ.டி.எம்மில் பணம் எடுக்கும் போது அலேர்டா இருக்கணும்!...
அன்பான தமிழ் மக்களே இனி நீங்கள் மிகவும் விழிப்புடன், மறவாமல் ஏ.டி.எம்மில் இருந்து பணத்தை முழுவதுமாக எடுத்த பிறகே அந்த இடத்தை விட்டு நகர வேண்டுமாறு கேட்டுகொள்கிறேன்..


No comments:

Post a Comment