Monday, April 1, 2019

மதுலிகா கணியூர்!!


https://youtu.be/yOhr4q3bdM0

சுட்டிக்குழந்தையின் Dupsmash மற்றும் அடுத்தடுத்த வீடியோ பார்க்க இதை பகிரவும்!!!!

குட்டி மதுலிகா

https://youtu.be/yOhr4q3bdM0

சுட்டி

Friday, February 22, 2013

உலக அமைதியின் முக்கியம்

நான் கல்லூரி முடித்து வீடு வந்துருந்த நேரம் அது..
சாப்டியா என்றபடி என் அன்னை தட்டில் சோறோடு வந்தாள்..
அச்சமயம் தொலைக்காட்சியில் எதை பார்பது என்று ரீமோட்டிடம் அலோசித்துக் கொண்டிருந்தேன்..
பிரபாகரனின் மகன் பற்றிய குரும்படம் பற்றியது புதிய தலைமுறை சேனலில் ஓடிக்கொண்டிருந்த்து..
கல்லூரி செல்லும் அவசரத்தில் அந்த பச்சிலம் முகத்தை மட்டுமே பார்தேன்
ஆனால் என்னாச்சு என்று ஆவாலோடு இப்பொழுது பார்த்துக்கொண்டிருந்தேன்
சாப்டியா என்றபடி என் அன்னை தட்டில் சோறோடு வந்தாள்..
“டேய் வேர திருப்புடா’’ என்ற சொன்னவுடன் என் நினைவு திருப்பினால் என் அன்னை..
இருமா என்றபடி பார்தேன்..
ஒருமாரி இருக்கு திருப்புடா என்றால்..
ஏனோ அதை பார்த்துக்கொண்டிருந்தேன்..
ஏங்கோ ஒரு மூலையில் கிடக்கும் இறந்த பிணங்கலையே என் அன்னைக்கு பார்க்க முடியவில்லை (என்னாலையும் தான்)
கண் முன்னால் எத்தனை பேர் தன் அன்னையை இழந்திருப்பார்
எத்தனை தாய் தன் மகனை கண் முன்னால் இழந்திருப்பர்
நினைக்கையில் அதன் நினைவோடு பிரபாகரனின் மகன் இறந்த பட்த்தை பார்கையில் கண் கழங்கிற்று..
அந்த கண்ணீருக்கு காரணம் நான் தமிழனோ அல்லது இந்தியனோ அல்ல..
நான் மனம் கொண்ட மனிதன் மட்டுமே..
என்னைப் போல் இப்படி சவமாய் கிடப்பதை பார்க்க முடியவில்லை..
இதில் நான் வேண்டிக்கொள்வது போர்கள் வேண்டாம் என்பதே
உலக அமைதியின் முக்கியம் மட்டுமே...

Monday, September 17, 2012

ராஜபக்சேவுக்கு எதிராக கோஷமிட்டு சேலத்தில் இளைஞர் தீக்குளிப்பு!

ராஜபக்சேவுக்கு எதிராக கோஷமிட்டு சேலத்தில் இளைஞர் தீக்குளிப்பு!

ராஜபக்சேவின் வருகையை கண்டித்து சேலத்தில் இன்று அதிகாலை விஜயராஜ் என்ற தானி ஓட்டுனர் தீக்குளித்துள்ளார் என்ற செய்தி நம்மையெல்லாம் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.



மீண்டும் ஒரு முத்துகுமரன், செங்கொடி தமிழகத்தில் வரக் கூடாது என்று நாம் விரும்பினாலும் இந்த தோழரின் உணர்வை நம்மால் புரிந்து கொள்ள முடியாமல் இல்லை. ஒரு இனப்படுகொலை செய்த அரக்கனை இந்திய நாடு வரவேற்பதை எந்த மானமுள்ள தமிழனும் விரும்ப மாட்டான். அவனை தடுக்க முடியவில்லையே என்ற ஆற்றாமையில் தான் விஜயராஜ் தீக்குளித்துள்ளார். இன்னும் அவரது உயிர் மருத்துவமனையில் ஊசலாடிக் கொண்டு இருக்கிறது. அவரின் உணர்வுக்கு தமிழர்கள் நாம் தலை வணங்குகிறோம்.

ஆனால் யாரும் இப்படியான முடிவை எடுக்கக் கூடாது என்பதே நம் விருப்பம். விஜயராஜ் அவர்களின் நிலைக்கு நம் ஆழ்ந்த வருத்தங்கள் .

தீக்குளிப்பை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுகொள்ள முடியாது, தயவுசெய்து இது போன்ற காரியங்களை செய்யாதீர்!!

Saturday, September 8, 2012

வணக்கம் நேயர்களே...

காலையில் எழுந்ததுமே
செல்ஃபோனில் வந்திருந்த ஒரு மொக்கை ஜோக்கை
படித்துவிட்டு சிரிக்கும் இன்றைய
இளந்தலைமுறையினர்க்குத்
தெரிந்திருக்காது இந்த
'வணக்கம் நேயர்களே..' என்ற வார்த்தையில் இருந்த
ஓர் ஈர்ப்புத்தன்மையும்,
அந்த வார்த்தையின் சொந்தக்காரரின் வரலாறும்...


தென்கச்சி கோ.சுவாமிநாதன்..


அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற
ஊரில் பிறந்த கோ. சுவாமிநாதன் சென்னை
மடிப்பாக்கத்தில் வசித்து வந்தார். வேளாண்மைப்
பட்டதாரி ஆவார்..

சென்னை வானொலியில் இன்று ஒரு தகவல் என்னும்
மிகப் பிரபலமான நிகழ்ச்சியை தொடர்ந்து பல ஆண்டுகள்
வழங்கியவர்
தென்கச்சி கோ.சுவாமிநாதன்...

அது ஒலிபரப்பான காலகட்டத்தில்
அதை கேட்காதவர்களே இல்லை என்ற அளவுக்கு,
அந்நிகழ்ச்சி புகழ் பெற்று விளங்கியது..

அதில்
தினம் தினம் புதுப்புது தகவல்களை சொல்வதுடன்,
அதற்கு முடிவாக ஒரு நகைச்சுவை கலந்த கதையையும்
கூறி இன்று ஒருத் தகவலை முடிப்பார்....

அவர்
தொகுத்து வழங்கும் விதம்‌‌ அவருக்கு ஏராளமான
ரசிகர்களை பெற்றுத் தந்தது..

முகம் அறியா குயிலின் நாதத்திற்கு நாம் மெய்
மறப்பது போல,
முகம் தெரியாத அந்த
காலக்கட்டத்திலேயே
தென்கச்சி கோ.சுவாமிநாதனுக்கு
ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்..

அவரது கதைகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள்
வரை அனைவரும் கேட்டு பயன்பெற்றனர்..

ஒவ்வொரு தகவலும்
ரத்தினச் சுருக்கமாகவும்,

கடைசியாகச் சொல்லும் கதை சிந்திக்க‌ வைப்பதாகவும்
இருக்கும்..
தினமும்‌ ஒரு தகவலைக் கூடத் தேடிவிடலாம்..
தினமும்‌ ஒரு கதையை எங்குதான் தேடுவாரோ என்று ஊரெல்லாம் ஆச்சரியப்பட்டுக்
கொண்டிருந்தனர்...!

சுவாமிநாதன்,
பிரபல எழுத்தாளராகவும்
விளங்கினார்..

அன்பின் வலிமை,
தீயோர் மற்றும்
அறிவுச்செல்வம்
உள்பட ஏராளமான
புத்தகங்களை தென்கச்சி கோ.சுவாமிநாதன்
எழுதியுள்ளார்..

1977-ம் ஆண்டில் அகில இந்திய வானொலி பணியில்
சேர்ந்த அவர்,
விவசாய நிகழ்ச்சி பிரிவு இயக்குனராக
நியமிக்கப்பட்டபோது,, 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி மூலம் வானொலி நேயர்களிடையே பிரபலமாக விளங்கினார்.
வீடும் வயலும் என்ற சிறப்பான
நிகழ்ச்சி மூலம் விவசாயத்துறையின்
மேம்பாட்டுக்கு பெரிதும் உதவிபுரிந்தார்..



இதுதவிர, குழந்தைகளுக்கான
ஏராளமான
நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்கியவர்
தென்கச்சி கோ.சுவாமிநாதன் என்பது குறிப்பிடத்தக்கது..

பின்னர்‌,
தொலைக்காட்சிகளிலும்
தோன்றி இன்று ஒரு தகவலை வழங்கி வந்தார்..

அவரது மறைவு வருங்கால சந்ததியினருக்கு பெரும்
இழப்பு என்றுதான் சொல்ல வேண்டும்..

நாம் அவரிடம்
கேட்ட
கதைகளை நினைவு‌ கூர்ந்து நமது பிள்ளைகளுக்கு‌
சொல்ல வேண்டியது நமது பொறுப்பு..
அவருக்கு செய்யும் சிறு‌ தொண்டாகவும் இதனைக்
கருதலாம்...

நன்றி : தமிழ் வளர்ப்போம்

Friday, September 7, 2012

தமிழ்நாட்டு நாட்டுப்புறங்களில் அண்மைய காலம் வரை, விளையாடப்பட்ட விளையாட்டுகளை அறிஞர் பெருமக்கள் பலர் தொகுத்து எழுதியுள்ளனர். அவற்றின் தொகுப்பாக இந்தக் கட்டுரையில் 200 விளையாட்டுகள் அகரவரிசையில் தொகுக்கப்பட்ட பின்னர் வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டு நாட்டுப்புறங்களில் அண்மைய காலம் வரை,
விளையாடப்பட்ட
விளையாட்டுகளை அறிஞர் பெருமக்கள் பலர்
தொகுத்து எழுதியுள்ளனர். அவற்றின் தொகுப்பாக
இந்தக் கட்டுரையில் 200 விளையாட்டுகள்
அகரவரிசையில் தொகுக்கப்பட்ட பின்னர்
வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன.

சிறுவர் (பையன்கள்)
கைத்திறன்
கோலி விளையாட்டு
1. அச்சுப்பூட்டு
2. கிட்டிப்புள்
3. கோலி
4. குச்சி விளையாட்டு

(எல்லா வயதினரும், ஆண்
பெண் இருபாலாரும்)
5. குதிரைக் கல்லு
6. குதிரைச் சில்லி
7. சச்சைக்காய் சில்லி
8. சீச்சாங்கல்
9. தெல்லு (தெல்லுருட்டான்)
10. தெல்லு (தெல்லு எறிதல்)
11. பட்டம்
12. பந்து, பேய்ப்பந்து
13. பம்பரம்
14. மல்லு
15. வில்லுக்குச்சி

கால் திறன்
1. ஆனமானத் திரி
2. கரணப்பந்து
3. குதிரைக்குக் காணம் காட்டல்
4. கொக்கு விளையாட்டு
5. கோழிக்கால்
6. தை தக்கா தை
7. நடைவண்டி ஓட்டம்
8. நொண்டி
9. பச்சைக் குதிரை
10. பொய்க்கால் நடை, கொட்டாங்குச்சி நடை
11. மந்தி ஓட்டம்
12. மாட்டுக்கால் தாண்டல்
13. மூக்குப்பிடி (துரத்திப் பிடி)

அணி விளையாட்டு
1. ஓடுசிக்கு
2. சூ விளையாட்டு
3. நாடு பிரித்து
4. பந்து, பிள்ளையார் பந்து
5. பூச்சொல்லி
6. மதிலொட்டி
7. மந்திக் குஞ்சு
8. வண்டி உருட்டல்

குழு விளையாட்டு
1. அணில் பிள்ளை
2. ஆடும் ஓநாயும்
3. உயிர் கொடுத்து
4. கல்லுக்குச்சி
5. காக்கா கம்பு
6. காக்கா குஞ்சு
7. குச்சிக்கல்
8. குரங்கு விளையாட்டு
9. கோட்டான் கோட்டான்
10. கோழிக்குஞ்சு
11. தவளை விளையாட்டு
12. நாலுமூலைக் கல்
13. மரக்குரங்கு
14. வண்ணான் தாழி
15. வண்ணான் பொதி

நீர் விளையாட்டு
1. காயா பழமா
2. நீரில் தொடல்
3. நீரில் விழுதல்

கண்டுபிடி
1. உருண்டை திரண்டை
2. சீப்பு விற்கிறது

உல்லாசம்
1. ஊதல்
2. கால் தூக்கிற கணக்கப்பிள்ளை
3. சீத்தடி குஞ்சு
4. தோட்டம் (விளையாட்டு)
5. பஞ்சு வெட்டும் கம்போடா

சிறுமியர்
உடல்-திறன்
1. சில்லு (சில்லி)

கைத்திறன்
1. கல் பிடித்தல்
2. சுண்டு முத்து
3. தட்டாங்கல்

உல்லாசம்
1. இதென்ன மூட்டை
2. கிளி செத்துப்போச்சு
3. ஊதாமணி
4. என் உலக்கை குத்து குத்து
5. ஒருபத்தி இருபத்தி
6. ஒளிதல்
7. குச்சு குச்சு ரங்கம்மா
8. குறிஞ்சி வஞ்சி
9. கொடுக்கு
10. சிறுவீடு விளையாட்டு
11. சோத்துப்பானை (சோற்றுப்பானை)
12. ராட்டு பூட்டு
13. தவிட்டுக் குஞ்சு
14. பிஸ்ஸாலே பற
15. பூசனிக்காய் விளையாட்டு
16. பூப்பறி விளையாட்டு
17. பூப்பறிக்க வருகிறோம்
18. பூப்பூ புளியம்பூ
19. மச்சிலே யாரு
20. மத்தாடு
21. மோரு விளையாட்டு
22. வேடிக்கை விளையாட்டு

கலை விளையாட்டு
1. கும்மி

இருபால் இளைஞர்
உடல் திறன்
1. ஊதுமுத்து
2. உயிர் எழுப்பு
3. ஐந்து பந்து
4. எலியும் பூனையும்
5. கல் எடுத்தல்
6. கல்லா மண்ணா
7. கல்லுக் கொடுத்தான் கல்லே வா
8. குஞ்சு விளையாட்டு
9. குத்து விளையாட்டு
10. துரத்திப் பிடி
11. தூண் விளையாட்டு
12. தொடு விளையாட்டு
13. நாலு மூலை விளையாட்டு
14. நிலாப்பூச்சி
15. நெல்லிக்காய் (பாடித் தொடுதல்)
16. பாரிக்கோடு
17. புலியும் ஆடும்
18. மரங்கொத்தி
19. மல்லர் கம்பம்
20. மலையிலே தீப்பிடிக்குது
21. மாங்கொழுக்கட்டை

உல்லாசம்
1. ஊஞ்சல்
2. ஈசல் பிடித்தல்
3. உப்பு விற்றல்
4. ஒருகுடம் தண்ணி ஊத்தி – விளையாட்டு
5. கரகர வண்டி
6. கள்ளன் போலீஸ்
7. காற்றாடி
8. கிய்யா கிய்யா குருவி
9. கிழவி விளையாட்டு
10. கிறுகிறு மாம்பழம்
11. குலையா குலையா முந்திரிக்காய்
12. சங்கிலி விளையாட்டு
13. தட்டான் பிடித்தல்
14. தட்டை
15. நடிப்பு விளையாட்டு (தண்ணீர் சேந்துகிறது)
16. பந்து, எறிபந்து
17. பந்து, பிடிபந்து
18. பன்னீர்க்குளம் (விளையாட்டு)
19. பூக்குதிரை
20. வண்டி உருட்டல்

உத்தித் திறன்
1. உப்பு வைத்தல்
2. எண் விளையாட்டு
3. ஓடுகுஞ்சு
4. கண்ணாம்மூச்சி
5. கிச்சுக் கிச்சுத் தம்பலம்
6. கொப்பரை கொப்பரை
7. தந்தி போவுது தபால் போவுது
8. நிலாக் குப்பல்
9. பாக்குவெட்டியைக் காணோமே
10. மாது மாது

ஊழ்த்திறன் (திருவுளம்)
1. ஒற்றையா இரட்டையா
2. கண்கட்டி விளையாட்டு
3. மோதிரம் வைத்தல்
4. ராசா மந்திரி

பட்டவர் தெரிவு
1. ஓ… சிய்யான்
2. பருப்பு சட்டி (விளையாட்டு)
3. புகையிலைக் கட்டை உருட்டுதல்

காளையர்
1. அடிமுறை
2. இளவட்டக்கல்
3. கிளித்தட்டு
4. சடுகுடு (கபடி)
5. சல்லிக்கட்டு (பாய்ச்சல் காளை)
6. சிலம்பம்

கன்னியர்
1. அம்மானை
(ஒருவர் ஆடுவது சங்ககாலப்
பந்து விளையாட்டு. மூவர், ஐவர் எனக் கூடிப்
பாட்டுப்
பாடிக்கொண்டு அடுவது அம்மானை விளையாட்டு)

முதியோர்
1. ஆடுபுலி
2. ஓட்டம்
3. கட்ட விளையாட்டு
4. கைச்சில்லி
5.சூது தாயம்
6. தாயம்
7. திரிகுத்து
8. துரும்பு
9. நட்சத்திர விளையாட்டு
10. பரமபதம் (விளையாட்டு)
11. பல்லாங்குழி
12. முக்குழியாட்டம்

பாப்பா விளையாட்டு
1. அந்தக் கழுதை இந்தக் கழுதை
2. அய்யன் கொம்பு
3. அட்டலங்காய் புட்டலங்காய்
4. அத்தளி புத்தளி
5. உப்பு மூட்டை
6. கிள்ளாப் பறண்டடி
7. தட்டலங்காய் புட்டலங்காய்
8. தென்னைமரம் விளையாட்டு
(ஐலேலம் ஐலகப்பல்
விளையாட்டு)
9. நடைவண்டி
10. நான் வளர்த்த நாய்க்குட்டி
11. பருப்பு கடை (விளையாட்டு)

எல்லாரும் விளையாடும் விளையாட்டு..

கலை விளையாட்டு
1. கரகம்
2. கழியல்
3. கழைக்கூத்து
4. காவடி
5. கோக்கழிக் கட்டை
6. வர்மம்

தெய்வ ஆடல்கள்
மக்கள் ஆடல்கள்
விழா விளையாட்டு
1. உரிமரம்
2. உரியடி
3. கார்த்திகை விளக்கு
4. கார்த்திகைச் சுளுந்து
5. தைப்பாவை
6. பரணி பரணி
7. பாரி வேட்டை
8. பானை உடைத்தல்
9. புலியாட்டம்
10. பொம்மைச்சீட்டு
11. மஞ்சள் நீர் விளையாட்டு
12. மாட்டுப் பந்தயம்
13. மூணுகட்டை
14. மோடி விளையாட்டு

Photo: தமிழ்நாட்டு நாட்டுப்புறங்களில் அண்மைய காலம் வரை,
விளையாடப்பட்ட
விளையாட்டுகளை அறிஞர் பெருமக்கள் பலர்
தொகுத்து எழுதியுள்ளனர். அவற்றின் தொகுப்பாக
இந்தக் கட்டுரையில் 200 விளையாட்டுகள்
அகரவரிசையில் தொகுக்கப்பட்ட பின்னர்
வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன.

சிறுவர் (பையன்கள்)
கைத்திறன்
கோலி விளையாட்டு
1. அச்சுப்பூட்டு
2. கிட்டிப்புள்
3. கோலி
4. குச்சி விளையாட்டு

(எல்லா வயதினரும், ஆண்
பெண் இருபாலாரும்)
5. குதிரைக் கல்லு
6. குதிரைச் சில்லி
7. சச்சைக்காய் சில்லி
8. சீச்சாங்கல்
9. தெல்லு (தெல்லுருட்டான்)
10. தெல்லு (தெல்லு எறிதல்)
11. பட்டம்
12. பந்து, பேய்ப்பந்து
13. பம்பரம்
14. மல்லு
15. வில்லுக்குச்சி

கால் திறன்
1. ஆனமானத் திரி
2. கரணப்பந்து
3. குதிரைக்குக் காணம் காட்டல்
4. கொக்கு விளையாட்டு
5. கோழிக்கால்
6. தை தக்கா தை
7. நடைவண்டி ஓட்டம்
8. நொண்டி
9. பச்சைக் குதிரை
10. பொய்க்கால் நடை, கொட்டாங்குச்சி நடை
11. மந்தி ஓட்டம்
12. மாட்டுக்கால் தாண்டல்
13. மூக்குப்பிடி (துரத்திப் பிடி)

அணி விளையாட்டு
1. ஓடுசிக்கு
2. சூ விளையாட்டு
3. நாடு பிரித்து
4. பந்து, பிள்ளையார் பந்து
5. பூச்சொல்லி
6. மதிலொட்டி
7. மந்திக் குஞ்சு
8. வண்டி உருட்டல்

குழு விளையாட்டு
1. அணில் பிள்ளை
2. ஆடும் ஓநாயும்
3. உயிர் கொடுத்து
4. கல்லுக்குச்சி
5. காக்கா கம்பு
6. காக்கா குஞ்சு
7. குச்சிக்கல்
8. குரங்கு விளையாட்டு
9. கோட்டான் கோட்டான்
10. கோழிக்குஞ்சு
11. தவளை விளையாட்டு
12. நாலுமூலைக் கல்
13. மரக்குரங்கு
14. வண்ணான் தாழி
15. வண்ணான் பொதி

நீர் விளையாட்டு
1. காயா பழமா
2. நீரில் தொடல்
3. நீரில் விழுதல்

கண்டுபிடி
1. உருண்டை திரண்டை
2. சீப்பு விற்கிறது

உல்லாசம்
1. ஊதல்
2. கால் தூக்கிற கணக்கப்பிள்ளை
3. சீத்தடி குஞ்சு
4. தோட்டம் (விளையாட்டு)
5. பஞ்சு வெட்டும் கம்போடா

சிறுமியர்
உடல்-திறன்
1. சில்லு (சில்லி)

கைத்திறன்
1. கல் பிடித்தல்
2. சுண்டு முத்து
3. தட்டாங்கல்

உல்லாசம்
1. இதென்ன மூட்டை
2. கிளி செத்துப்போச்சு
3. ஊதாமணி
4. என் உலக்கை குத்து குத்து
5. ஒருபத்தி இருபத்தி
6. ஒளிதல்
7. குச்சு குச்சு ரங்கம்மா
8. குறிஞ்சி வஞ்சி
9. கொடுக்கு
10. சிறுவீடு விளையாட்டு
11. சோத்துப்பானை (சோற்றுப்பானை)
12. ராட்டு பூட்டு
13. தவிட்டுக் குஞ்சு
14. பிஸ்ஸாலே பற
15. பூசனிக்காய் விளையாட்டு
16. பூப்பறி விளையாட்டு
17. பூப்பறிக்க வருகிறோம்
18. பூப்பூ புளியம்பூ
19. மச்சிலே யாரு
20. மத்தாடு
21. மோரு விளையாட்டு
22. வேடிக்கை விளையாட்டு

கலை விளையாட்டு
1. கும்மி

இருபால் இளைஞர்
உடல் திறன்
1. ஊதுமுத்து
2. உயிர் எழுப்பு
3. ஐந்து பந்து
4. எலியும் பூனையும்
5. கல் எடுத்தல்
6. கல்லா மண்ணா
7. கல்லுக் கொடுத்தான் கல்லே வா
8. குஞ்சு விளையாட்டு
9. குத்து விளையாட்டு
10. துரத்திப் பிடி
11. தூண் விளையாட்டு
12. தொடு விளையாட்டு
13. நாலு மூலை விளையாட்டு
14. நிலாப்பூச்சி
15. நெல்லிக்காய் (பாடித் தொடுதல்)
16. பாரிக்கோடு
17. புலியும் ஆடும்
18. மரங்கொத்தி
19. மல்லர் கம்பம்
20. மலையிலே தீப்பிடிக்குது
21. மாங்கொழுக்கட்டை

உல்லாசம்
1. ஊஞ்சல்
2. ஈசல் பிடித்தல்
3. உப்பு விற்றல்
4. ஒருகுடம் தண்ணி ஊத்தி – விளையாட்டு
5. கரகர வண்டி
6. கள்ளன் போலீஸ்
7. காற்றாடி
8. கிய்யா கிய்யா குருவி
9. கிழவி விளையாட்டு
10. கிறுகிறு மாம்பழம்
11. குலையா குலையா முந்திரிக்காய்
12. சங்கிலி விளையாட்டு
13. தட்டான் பிடித்தல்
14. தட்டை
15. நடிப்பு விளையாட்டு (தண்ணீர் சேந்துகிறது)
16. பந்து, எறிபந்து
17. பந்து, பிடிபந்து
18. பன்னீர்க்குளம் (விளையாட்டு)
19. பூக்குதிரை
20. வண்டி உருட்டல்

உத்தித் திறன்
1. உப்பு வைத்தல்
2. எண் விளையாட்டு
3. ஓடுகுஞ்சு
4. கண்ணாம்மூச்சி
5. கிச்சுக் கிச்சுத் தம்பலம்
6. கொப்பரை கொப்பரை
7. தந்தி போவுது தபால் போவுது
8. நிலாக் குப்பல்
9. பாக்குவெட்டியைக் காணோமே
10. மாது மாது

ஊழ்த்திறன் (திருவுளம்)
1. ஒற்றையா இரட்டையா
2. கண்கட்டி விளையாட்டு
3. மோதிரம் வைத்தல்
4. ராசா மந்திரி

பட்டவர் தெரிவு
1. ஓ… சிய்யான்
2. பருப்பு சட்டி (விளையாட்டு)
3. புகையிலைக் கட்டை உருட்டுதல்

காளையர்
1. அடிமுறை
2. இளவட்டக்கல்
3. கிளித்தட்டு
4. சடுகுடு (கபடி)
5. சல்லிக்கட்டு (பாய்ச்சல் காளை)
6. சிலம்பம்

கன்னியர்
1. அம்மானை
(ஒருவர் ஆடுவது சங்ககாலப்
பந்து விளையாட்டு. மூவர், ஐவர் எனக் கூடிப்
பாட்டுப்
பாடிக்கொண்டு அடுவது அம்மானை விளையாட்டு)

முதியோர்
1. ஆடுபுலி
2. ஓட்டம்
3. கட்ட விளையாட்டு
4. கைச்சில்லி
5.சூது தாயம்
6. தாயம்
7. திரிகுத்து
8. துரும்பு
9. நட்சத்திர விளையாட்டு
10. பரமபதம் (விளையாட்டு)
11. பல்லாங்குழி
12. முக்குழியாட்டம்

பாப்பா விளையாட்டு
1. அந்தக் கழுதை இந்தக் கழுதை
2. அய்யன் கொம்பு
3. அட்டலங்காய் புட்டலங்காய்
4. அத்தளி புத்தளி
5. உப்பு மூட்டை
6. கிள்ளாப் பறண்டடி
7. தட்டலங்காய் புட்டலங்காய்
8. தென்னைமரம் விளையாட்டு
(ஐலேலம் ஐலகப்பல்
விளையாட்டு)
9. நடைவண்டி
10. நான் வளர்த்த நாய்க்குட்டி
11. பருப்பு கடை (விளையாட்டு)

எல்லாரும் விளையாடும் விளையாட்டு..

கலை விளையாட்டு
1. கரகம்
2. கழியல்
3. கழைக்கூத்து
4. காவடி
5. கோக்கழிக் கட்டை
6. வர்மம்

தெய்வ ஆடல்கள்
மக்கள் ஆடல்கள்
விழா விளையாட்டு
1. உரிமரம்
2. உரியடி
3. கார்த்திகை விளக்கு
4. கார்த்திகைச் சுளுந்து
5. தைப்பாவை
6. பரணி பரணி
7. பாரி வேட்டை
8. பானை உடைத்தல்
9. புலியாட்டம்
10. பொம்மைச்சீட்டு
11. மஞ்சள் நீர் விளையாட்டு
12. மாட்டுப் பந்தயம்
13. மூணுகட்டை
14. மோடி விளையாட்டு

சொல் விளையாட்டு
1. கேலி
2. பூக்குதிரை
3. பூச்சொல்லி
4. மொழி விளையாட்டு
5. ரானா மூனா தண்டட்டி

என்ன மூச்சு முட்டுகிறதா..?
போய் தண்ணீர் குடித்துவிட்டு,
உங்கள் கணிப்பொறியில்
cricket, car race விளையாடுங்கள்..

நமது பாரம்பரிய விளையாட்டுகள் எப்படிப்போனால் நமக்கென்ன..?

அழுகை வருகிறது அன்பர்களே..!

சொல் விளையாட்டு
1. கேலி
2. பூக்குதிரை
3. பூச்சொல்லி
4. மொழி விளையாட்டு
5. ரானா மூனா தண்டட்டி

என்ன மூச்சு முட்டுகிறதா..?
போய் தண்ணீர் குடித்துவிட்டு,
உங்கள் கணிப்பொறியில்
cricket, car race விளையாடுங்கள்..

நமது பாரம்பரிய விளையாட்டுகள் எப்படிப்போனால் நமக்கென்ன..?

அழுகை வருகிறது அன்பர்களே..!

பிடிபட்டார், ஈமு கொள்ளை குருசாமி... விவசாயிகள் பணம் என்னவாகும்?

பிடிபட்டார், ஈமு கொள்ளை குருசாமி...
விவசாயிகள் பணம் என்னவாகும்?

ஈமு கோழி வளர்ப்பில் சுமார் 200 கோடி வரை மோசடி செய்ததாக , சுசி ஈமு பண்ணை அதிபர், குருசாமி நேற்று கைது செய்யப்பட்டார். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நாடு முழுக்க வலை வீசி தேடியத
ாக சொல்லப்பட்ட நிலையில், ஒகேனக்கல்லில் வைத்து தற்போது அவரை கைது செய்ததாக கூறியுள்ளது போலீஸ்!
Photo: பிடிபட்டார், ஈமு கொள்ளை குருசாமி...
விவசாயிகள் பணம் என்னவாகும்?

ஈமு கோழி வளர்ப்பில் சுமார் 200 கோடி வரை மோசடி செய்ததாக , சுசி ஈமு பண்ணை அதிபர், குருசாமி நேற்று கைது செய்யப்பட்டார். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நாடு முழுக்க வலை வீசி தேடியதாக சொல்லப்பட்ட நிலையில், ஒகேனக்கல்லில் வைத்து தற்போது அவரை கைது செய்ததாக கூறியுள்ளது போலீஸ்!

பாவம் போலீஸ்தான் என்ன செய்யும்..?
கணக்கில் காட்டப்பட்ட 200 கோடி, கணக்கில் வராத இன்னும் பல நூறு கோடிகள் என்று குருசாமி கொள்ளை அடித்தது மொத்தம் எத்தனை கோடியோ? அத்தனையையும் கணக்கு எடுத்து, எழுதி வாங்கி, கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை பங்கு பிரித்து கொடுத்து... பிறகு, பணம் கட்டி ஏமந்தவர்களில் IASக்கு வேண்டியவர், IPSக்கு வேண்டியவர், மந்திரிக்கு வேண்டியவர், மந்திரி மச்சானுக்கு வேண்டியவர் என சிலருடைய பணத்தையெல்லாம் பைசா பிரச்னை இல்லாமல் வங்கி கொடுத்து... தங்களுடைய அலைச்சல்களுக்கு நிவாரணமாக சில லட்சங்களை எடுத்துக்கொண்டு... அப்பப்பா ரொம்ப கஷ்டம்தான்

ம்ம்... இனி குருசாமியின் கணக்கில் 200 ரூபாய் இருப்பதே அதிகம். பணம் கட்டி பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு இதை பிரித்துக் கொடுத்துவிடுவார்கள்?! அடுத்த மாதமே குருசாமி வெளியே வந்துவிடுவார். இந்த நாடகமும் முடிந்து விடும்!



நன்றி ": pasumai vikadan
பாவம் போலீஸ்தான் என்ன செய்யும்..?
கணக்கில் காட்டப்பட்ட 200 கோடி, கணக்கில் வராத இன்னும் பல நூறு கோடிகள் என்று குருசாமி கொள்ளை அடித்தது மொத்தம் எத்தனை கோடியோ? அத்தனையையும் கணக்கு எடுத்து, எழுதி வாங்கி, கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை பங்கு பிரித்து கொடுத்து... பிறகு, பணம் கட்டி ஏமந்தவர்களில் IASக்கு வேண்டியவர், IPSக்கு வேண்டியவர், மந்திரிக்கு வேண்டியவர், மந்திரி மச்சானுக்கு வேண்டியவர் என சிலருடைய பணத்தையெல்லாம் பைசா பிரச்னை இல்லாமல் வங்கி கொடுத்து... தங்களுடைய அலைச்சல்களுக்கு நிவாரணமாக சில லட்சங்களை எடுத்துக்கொண்டு... அப்பப்பா ரொம்ப கஷ்டம்தான்

ம்ம்... இனி குருசாமியின் கணக்கில் 200 ரூபாய் இருப்பதே அதிகம். பணம் கட்டி பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு இதை பிரித்துக் கொடுத்துவிடுவார்கள்?! அடுத்த மாதமே குருசாமி வெளியே வந்துவிடுவார். இந்த நாடகமும் முடிந்து விடும்!