Friday, August 31, 2012

தமிழகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆணையர்களை தேர்வு செய்வதற்கான நியமனக்குழு இன்று கூடியது. குழுவின் தலைவரான முதல் அமைச்சர் ஜெயலலிதா, நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இதில் பங்கேற்றனர். குழுவின் உறுப்பினரான எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இக்கூட்டத்தில், மாநில தகவல் ஆணையர்கள் பதவிக்கு யார் யாரை நியமிக்கலாம் என விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் முடிவில் 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை தகவல் ஆணையர்களாக நியமிக்க வேண்டும் என்று கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment