இலங்கையிலிருந்து சென்னைக்கு கடத்த முயன்ற ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கொழும்புவிலிருந்து இன்று காலை ஏர்இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்த ரூபராஜன், விஜிந்தா ஆகிய இரு பயணிகளும் தங்களிடம் சுங்க தீர்வை கட்டுவதற்கான பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறினர். இருந்தாலும் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.
தீவிரமாக சோதனை செய்ததில் அவர்கள் இடுப்பில் அணிந்திருந்த பெல்ட்டில் தங்க நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும். இதனைத் தொடர்ந்து அந்த தங்க நகைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர்கள் பலமுறை கொழும்புக்கும் சென்னைக்கும் இடையே பயணம் செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இலங்கையை விட இங்கு தங்கத்தின் விலை கூடுதலாக இருப்பதால் அவர்கள் இது போல கடத்தி வந்து விற்பனை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கொழும்புவிலிருந்து இன்று காலை ஏர்இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்த ரூபராஜன், விஜிந்தா ஆகிய இரு பயணிகளும் தங்களிடம் சுங்க தீர்வை கட்டுவதற்கான பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறினர். இருந்தாலும் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.
தீவிரமாக சோதனை செய்ததில் அவர்கள் இடுப்பில் அணிந்திருந்த பெல்ட்டில் தங்க நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும். இதனைத் தொடர்ந்து அந்த தங்க நகைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர்கள் பலமுறை கொழும்புக்கும் சென்னைக்கும் இடையே பயணம் செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இலங்கையை விட இங்கு தங்கத்தின் விலை கூடுதலாக இருப்பதால் அவர்கள் இது போல கடத்தி வந்து விற்பனை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment